Seo Services

மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிப்பு......!!!!!


முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற "நாட்டுக்காக ஒன்றினைவேம்" திட்டத்தின் கீழ் இன்று ஆரம்ப நிகழ்வுகள் இன்று(2019-06-03) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது.

அந்தவகையில் முல்/மாங்குளம் மத்திய மாக வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

வித்தியாலய முதல்வர் உயர் திரு.த.யோகானந்தராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலக உதவிச் செயலாளர் லலித் பண்டார , சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான ச.சத்தியசுதர்சன் , புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன் , வலயக்கல்வி அலுவலக உத்தியோகஸ்தர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.




மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிப்பு......!!!!! மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிப்பு......!!!!! Reviewed by Mankulam News on 6/03/2019 09:22:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.