புலம்பெயர் உறவான நோர்வே நாட்டைச் சேர்ந்த நலன் விரும்பி ஒருவர் வழங்கிய நிதி அன்பளிப்பின் மூலம் கடந்த கால யுத்த நிலைமைகளினால் பெற்றோரை இழந்த மாங்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கும் மற்றும் தந்தையை இழந்த பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருக்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு துவிச்சக்கர வண்டிகளை தந்துதவுமாறு பாடசாலை அதிபர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஊடாக வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் தலா ரூபா 18500 பெறுமதியான புதிய துவிச்சக்கர வண்டிகள் இரு மாணவர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
துவிச்சக்கரவண்டி வழங்கல்........
Reviewed by Mankulam News
on
6/01/2019 10:16:00 pm
Rating:

No comments: