Seo Services

A34 ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் இன்று விபத்து


இன்றைய தினம்  ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் பதினான்காவது கிலோ மீட்டருக்கு அண்மையில் இடம்பெற்ற டிப்பர் மோட்டார்சைக்கிள் விபத்தின் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியான சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக அவசர நோயாளர் காவு வண்டி வருவதற்கு தாமதமானதன் காரணமாக (20நிமிடங்களுக்கும் மேல் பல வாகனங்கள் அவ்விடத்தில் நின்றபோதிலும் யாரும் முன்வராத நிலையிலும்) அவ் வளியாக மாங்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் அவர்கள் தான் பயணித்த வாகனத்தில் கொண்டு சென்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக வந்துகொண்டிருந்த அவசர நோயாளர் காவு வண்டியில் மாற்றி அவரை ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்.

காயமடைந்தவர் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின் மாஞ்சோலை வைத்தியசாலையின் அவசர நோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து ஒன்று இடம்பெற்ற உடன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறவர்களை வேடிக்கை பார்க்காது உயிர்காப்போம்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர் உடல் நலம் தேறி வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்


A34 ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் இன்று விபத்து A34 ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் இன்று விபத்து Reviewed by Mankulam News on 12/09/2019 08:15:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.