முல்லைத்தீவு மாவட்டத்தில் 'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' செயற்றிட்டத்தில், பாடசாலைகளில் மாணவர்களின் மென்திறன்களை வளர்த்தெடுப்பதற்கான செயலமர்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டன.
அந்த வகையில் துணுக்காய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.சஞ்சீவன் அவர்களின் ஏற்பாட்டில் மு/மல்லாவி மத்திய கல்லூரி, மு/மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் தரம் - 10, 11 மாணவர்களுக்கான செயலமர்வுகள் மு/மல்லாவி மத்திய கல்லூரி, மு/மாங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றன.
துணுக்காய் பிரதேச செயலக மேற்பார்வையில் நடைபெற்ற இச்செயலமர்வின் வளவாளர்களாக உள மகிழ்வூட்டும் இல்லத்தின் முதன்மை வளவாளர்களான திரு.நா.கு. மகிழ்ச்சிகரன், திரு.சு. இக்னேசியஸ் கிளனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட செயலமர்வு - மு/மாங்குளம் ம.ம.வி
Reviewed by Mankulam News
on
6/08/2019 05:11:00 pm
Rating:

No comments: