Seo Services

மாங்குளத்தில் "அறிவூற்று" இலவசக் கல்வி நிலையம் பல தடைகளைத் தாண்டி இன்று ஆரம்பம்.........!!!


மாங்குளத்தில் உள்ள வறிய மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்கு என புலம்பெயா் உறவுகளின் உதவியுடன் அறிவூற்று எனும் இலவச கல்வி நிலையம் இன்று (2019/08/18) திறந்து வைக்கப்பட்டது.

இதில் தரம் 6 முதல் க.பொ.த சாதாரண தரம் வரையிலான மாணவா்கள் இலவசமாக கற்க முடியும்.

இந்த இலவச கல்வி நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தடைகளை தாண்டி இக் கல்வி நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
போரால் முற்று முழுதாக அழிந்து போய் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள பிரதேசமான மாங்குளத்தில் கல்வியினை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான வேலைகளை முன்னெடுக்கும் மாங்குளம் இளைஞர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்!
இதே போல ஏனைய இடங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும்.



மாங்குளத்தில் "அறிவூற்று" இலவசக் கல்வி நிலையம் பல தடைகளைத் தாண்டி இன்று ஆரம்பம்.........!!! மாங்குளத்தில் "அறிவூற்று" இலவசக் கல்வி நிலையம் பல தடைகளைத் தாண்டி இன்று ஆரம்பம்.........!!! Reviewed by Mankulam News on 8/18/2019 03:24:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.