Seo Services

மாங்குளம் உயிரிழையில் உணவகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது......!!!


உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பின் பயனாளிகளின் நிரந்தர நிதியீட்டத்துக்கான நிரந்தர வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் முகமாக நவீன முறையிலான உணவகம் ஒன்றினை அமைத்து அதனூடாக கிடைக்கப்பெறும் வருமானத்தின் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் புதிய உணவகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (2019-08-19)  காலை 10.00 மணியளவில் உயிரிழை அமைப்பின் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள புதிய இடத்தில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

குறித்த உணவகம் அமைப்பதற்கு அன்னைமடி அமைப்பு ஒழுங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்காக உயிரிழை அமைப்பின் பயனாளிகளுடன் கனடாவில் இருந்து வருகை தந்த திரு.இராசையா சிவகுமாரன், திரு.பாலசந்திரன் நித்தியானந்தம் திருமதி.செந்தூரி சிவகுருநாதன் திரு.S புவனேந்திரராஜா ஆகியோர் மற்றும் சமூக ஆர்வலர் திரு.ஈழவாணன் மற்றும் உயிரிழை அமைப்பின் அலுவலகர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.





மாங்குளம் உயிரிழையில் உணவகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது......!!! மாங்குளம் உயிரிழையில் உணவகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது......!!! Reviewed by Mankulam News on 8/20/2019 04:13:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.