மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி…! சாதாரணதர, உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை உங்கள் நகரங்களிலேயே பெற்றுக் கொள்ள வாய்ப்பு…!
க.பொ.த சாதாரணதர பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு கல்வியமைச்சு புதிய இலகுவான வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதன்படி மேற்குறித்த பரீட்சைக்குத் தோற்றியவர்கள் அவற்றின் சான்றிதழ்களைப்பெற கொழும்பிலுள்ள பரீட்சைகள் திணைக்களத்துக்கு அலைய வேண்டிய தேவையில்லை.எதிர்வரும் ஜூன் ஆறாம் திகதி முதல் நாட்டிலுள்ள பிரதான தபாலகங்களில் குறித்த சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.நாளாந்தம் இந்தச் சான்றிதழ்களைப்பெறுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்துக்கு 2000 பேர் வருகை தருகின்றனர்.எனவே நாட்டிலுள்ள பிரதம தபாலகங்களில், இந்த சான்றிதழ்களைப்பெறும் வகையில், கணனி வலையமைப்பு பரீட்சைகள் திணைக்களத்துடன் ஏற்படுத்தப்படவுள்ளது.எனவே, இந்தச் சான்றிதழ்கள் தேவைப்படுவோர் அதற்கான தகவல்களை வழங்கி அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி மேற்குறித்த பரீட்சைக்குத் தோற்றியவர்கள் அவற்றின் சான்றிதழ்களைப்பெற கொழும்பிலுள்ள பரீட்சைகள் திணைக்களத்துக்கு அலைய வேண்டிய தேவையில்லை.எதிர்வரும் ஜூன் ஆறாம் திகதி முதல் நாட்டிலுள்ள பிரதான தபாலகங்களில் குறித்த சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.நாளாந்தம் இந்தச் சான்றிதழ்களைப்பெறுவதற்கு பரீட்சைகள் திணைக்களத்துக்கு 2000 பேர் வருகை தருகின்றனர்.எனவே நாட்டிலுள்ள பிரதம தபாலகங்களில், இந்த சான்றிதழ்களைப்பெறும் வகையில், கணனி வலையமைப்பு பரீட்சைகள் திணைக்களத்துடன் ஏற்படுத்தப்படவுள்ளது.எனவே, இந்தச் சான்றிதழ்கள் தேவைப்படுவோர் அதற்கான தகவல்களை வழங்கி அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி…! சாதாரணதர, உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை உங்கள் நகரங்களிலேயே பெற்றுக் கொள்ள வாய்ப்பு…!
Reviewed by Mankulam News
on
6/07/2019 06:08:00 am
Rating:

No comments: