இலங்கையின் போக்குவரத்து துறையில் ஏற்படப் போகும் புதிய மாற்றம்… வீதிகளை அலங்கரிக்கப் போகும் புதிய பஸ் வண்டிகள்…!
இலங்கையில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் மூவாயிரம் பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழானவிதிகள் தொடர்பிலான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் அர்ஜூண ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துகள் இறக்குமதி செய்யப்படும் போது அது தொடர்பான தராதரங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி, செயற்கையான முறையில் பங்குச் சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போக்குவரத்து துறையில் ஏற்படப் போகும் புதிய மாற்றம்… வீதிகளை அலங்கரிக்கப் போகும் புதிய பஸ் வண்டிகள்…!
Reviewed by Mankulam News
on
5/25/2019 10:36:00 pm
Rating:

No comments: