Seo Services

தவிசாளர்களுக்கு அவசரமாக அழைப்பு விடுத்த- முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்!!

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தில் இன்று நடத்­தும் அபி­வி­ருத்தி மீளாய்­வுக் கூட்­டத்­துக்கு பிர­தேச சபைத் தவி­சா­ளர்­க­ளுக்கு அழைப்பு அனுப்­பப்­ப­ட­வில்லை.
இது தொடர்­பில் ஊடக சந்­திப்புக்கு பிர­தேச சபைத் தவி­சா­ளர்­கள் அழைப்புவிடுத்­த­தும், முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தால் அவ­சர அவ­ச­ர­மாக தவி­சா­ளர்­க­ளுக்கு அழைப்பு அனுப்­பப்­பட்­டுள்­ளது.
வடக்­குக்கு மூன்று நாள் பய­ண­மாக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வந்­துள்­ளார். முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தில் இன்று மீளாய்­வுக் கூட்­டம் இடம்­பெ­ற­வுள்­ளது.
இந்­தக் கூட்­டத்­துக்கு திணைக்­க­ளத் தலை­வர்­கள் உள்­ளிட்ட பல­ரும் அழைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் மக்­கள் பிர­தி­நி­தி­க­ளான பிர­தேச சபைத் தவி­சா­ளர்­கள் அழைக்­கப்­ப­ட­வில்லை.
இது தொடர்­பில் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச சபைத் தவி­சா­ளர் செ.பிறே­ம­காந், மாந்தை கிழக்­குப் பிர­தேச சபைத் தவி­சா­ளர் தயா­நந்­தன் ஆகி­யோர் இணைந்து நேற்­றுப் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நடத்­தி­னர்.
அவர்­கள் தெரி­வித்­த­த­தா­வது:
மாவட்­டச் செய­ல­கத்­தில் இடம்­பெ­றும் கூட்­டத்­துக்கு பிர­தேச செய­லர்­க­ளுக்கு மூன்று நாள்­க­ளுக்கு முன்­னர் அழைப்பு அனுப்­பப்­பட்­டுள்­ளது. எங்­க­ளுக்கு ஊடக சந்­திப்­புக்கு அறி­விப்பு விடுத்த சில நிமி­டங்­க­ளின் பின்­னரே அழைப்­புக் கிடைத்­துள்­ளது. அழைப்பு தவ­று­த­லாக அனுப்­பப்­ப­ட­வில்லை என்று சாக்­குப் போக்­குச் சொல்­கின்­றார்­கள்.
பதவி ஒழுங்கு நிலை உள்­ளது. அரச தலை­வர், தலைமை அமைச்­சர், ஆளு­நர், முத­ல­மைச்­சர், அமைச்­சர்­கள், பிர­தேச சபைத் தவி­சா­ளர்­கள் என்று மதிப்­ப­ளிக்­கப்­ப­ட­வேண்­டிய ஒழுங்கு உள்­ளது.
ஆனால் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள அரச திணைக்­க­ளங்­க­ளில் உள்ள அதி­கா­ரி­கள் பிர­தேச சபைத் தவி­சா­ளர்­கள், சபை உறுப்­பி­னர்­களை மதிப்­ப­தில்லை. மாற்­றாந்­தாய் போன்று நடத்­து­கின்­றார்­கள்.
மக்­கள் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்­கிய ஆட்சி உரு­வாக்­கப்­பட்ட பின்­ன­ரும், பிர­தேச சபைச் செய­லர்­க­ளுக்கு அனுப்­பப்­ப­டும் கடி­தங்­க­ளைப் பார்த்­தால், இங்கு அவ்­வா­றான ஆட்சி நடக்­கா­த­து­போன்றே உள்­ளது. இது தொடர்­பில் கொழும்பு அர­சின் அமைச்;சுக்­க­ளுக்­கும் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம் – என்­றார்­கள்.
தவிசாளர்களுக்கு அவசரமாக அழைப்பு விடுத்த- முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்!! தவிசாளர்களுக்கு அவசரமாக அழைப்பு விடுத்த- முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்!! Reviewed by Mankulam News on 2/17/2019 04:35:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.