Seo Services

போதைப்­பா­வ­னைக்கு எதி­ராக மல்­லா­வி­யில் ஊர்­வ­லம்!!


முல்­லைத்­தீவு துணுக்­காய்ப் பிர­தே­சத்­துக்கு உட்­பட்ட மல்­லாவி பகு­தி­யில் அரச தலை­வ­ரின் கிராம சக்தி மக்­கள் செயற் திட்­டத்­தின் கீழ் போதைப் பொ­ருள் ஒழிப்பு கவ­ன­வீர்ப்பு ஊர்­வ­லம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
நேற்­றுக் காலை மல்­லாவி துணுக்­காய் முதன்மை வீதி­யில் ஒன்­று­கூ­டிய கிராம மக்­கள் முன்மை வீதி­ஊ­டாக மங்கை குடி­யி­ருப்பு நோக்கி போதை­ பொ­ருள் பாவ­னைக்கு எதி­ரான வசனங்­கள் தாங்­கிய பதா­தை­களை கையில் ஏந்­தி­ய­வாறு இந்த கவ­ன­வீர்ப்பு ஊர்­வ­லத்தை முன்­னெ­டுத்­தனர்.
மல்­லாவி வடக்கு மங்கை குடி­யி­ருப்பு கிராம அலு­வ­ல­கம் வரை சென்­ற­டைந்த ஊர்­வ­லத்­தில் மல்­லாவி கிராம அலு­வ­ல­கர் திரு­மதி.றாஜினி, துணுக்­காய் பிர­தேச அபி­வி­ருத்தி அலுவலர் ந.தாரகை, மல்­லாவி பிராந்­திய சுகா­தார பணி­மனை அதி­காரி அர­விந்­தன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர். போதைப்­பொ­ருள் பாவனை தொடர்­பி­லான விழிப்­பு­ணர்வு கருத்­துக்­க­ளை­யும் வழங்­கி­யுள்­ளார்கள்.
போதைப்­பா­வ­னைக்கு எதி­ராக மல்­லா­வி­யில் ஊர்­வ­லம்!! போதைப்­பா­வ­னைக்கு எதி­ராக மல்­லா­வி­யில் ஊர்­வ­லம்!! Reviewed by Mankulam News on 2/22/2019 08:19:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.