Seo Services

பேரூந்து தரிப்பிடம் பா.உ கெளரவ சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களால் திறந்துவைப்பு! (2019/01/15)


நேற்று 15.01.2019 தை பொங்கல் தினத்தை முன்னிட்டு உயிரிழை அமைப்பின் பயனாளிகளுக்காக விசேடமாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது நேற்று (15) காலை 11 மணியளவில் உயிரிழை அமைப்பின் அலுவலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம் கெளரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களினால் திறந்த வைக்கப்பட்டது.


இதற்கான நிதியை கெளரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களின் 2018 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக  வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி இந்த பேருந்து தரிப்பிடத்தை அமைப்பதற்கு நிதியுதவி வழங்கிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களுக்கு  உயிரிழை அமைப்பின் பயனாளிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிற்றனர் உயிரிழை அமைப்பினர்.









பேரூந்து தரிப்பிடம் பா.உ கெளரவ சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களால் திறந்துவைப்பு! (2019/01/15) பேரூந்து தரிப்பிடம் பா.உ கெளரவ சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களால் திறந்துவைப்பு! (2019/01/15) Reviewed by Mankulam News on 1/16/2019 04:25:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.