Seo Services

மாங்குளம் சமுர்த்தி வங்கிக்கு புதிய முகாமையாளரை நியமிக்குமாறு கோரிக்கை.!


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பிரதேசத்தில் இயங்கி வருகின்ற சமுர்த்தி வங்கி சங்கத்திற்கு நிரந்தர முகாமையாளரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
மாங்குளத்தில் இயங்கி வருகின்ற சமுர்த்தி வங்கி சங்கமானது மாங்குளம் பிரதேசத்தை   உள்ளடக்கியதாக   திருமுறுகண்டி  பனிக்கன்குளம் மாங்குளம் ஒலுமடு அம்பகாமம் கரிப்பட்டமுறிப்பு ஆகிய பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்துகின்ற ஒரு சங்கமாக காணப்படுகின்றது
இங்கு நிரந்தர முகாமையாளர் இல்லாமையினால் வங்கி நடவடிக்கைகளை பெறுகின்ற மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் குறிப்பாக கடன் பெறுதல்  மற்றும் அவர்களுடைய வங்கி நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
 எனவே பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த வங்கிக்கு  நிரந்தர முகாமையாளரை  நியமித்து  தங்களுடைய சேவைகளை இலகுவாக பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாங்குளம் சமுர்த்தி வங்கிக்கு புதிய முகாமையாளரை நியமிக்குமாறு கோரிக்கை.! மாங்குளம் சமுர்த்தி வங்கிக்கு புதிய முகாமையாளரை நியமிக்குமாறு கோரிக்கை.! Reviewed by Mankulam News on 3/02/2019 01:44:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.