Seo Services

மாங்குளம் ம.வி மாணவர்கள் மூவருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு


மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற போக்குவரத்தில் ஈடர்படுகின்ற மாணவர்களுக்கான  துவிச்சக்கர வண்டிகள் உதவும் இதயங்கள் நிறுவனத்தினூடாக வழங்கிவைக்கப்பட்டது.

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற 3 மாணவர்கள் தங்களுடைய கற்றல் செயற்பாட்டை இலகுபடுத்தும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் தலைமையில் மாங்குளத்தில் நேற்று  (20/11/2019) நடைபெற்றது.

உதவிகளை ஜெர்மனியில் வசித்து வரும் நடராசா பத்மராஜா அவர்கள் தன்னுடைய 50வது பிறந்தநாளை முன்னிட்டு இரு மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்ததோடு அமெரிக்காவில் வசித்து வருகின்ற திரு நவநேசன்  அவர்களின் புதல்வி செல்வி ந.அனுசா அவர்கள் தன்னுடைய மூன்றாவது பிறந்தநாள் நினைவாகவும் ஒரு துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாங்குளம் கிராமிய மகளிர் சுய முன்னேற்ற குழுக்களினுடைய உறுப்பினர்கள் மற்றும் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி மற்றும் மாங்குளம் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மாங்குளம் ம.வி மாணவர்கள் மூவருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு மாங்குளம் ம.வி மாணவர்கள் மூவருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு Reviewed by Mankulam News on 11/21/2019 08:13:00 am Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.