அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்- மக்கள் பிரதிநிதிகளால் கண்கானிப்பு!!
Mankulam News
6/19/2019 02:16:00 pm

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மருதமடுக் கிராமத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் நிதி ஒதுக்கீட்டில், மருதமடுக் கிராமத்தில் காணப்படும், மதகுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடினர்.
ரவிகரனுடன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் பிரதித் தலைவர் கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந் உள்ளிட்டவர்கள் சென்றிருந்தனர்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்- மக்கள் பிரதிநிதிகளால் கண்கானிப்பு!!
Reviewed by Mankulam News
on
6/19/2019 02:16:00 pm
Rating:



